ரூ.12 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் :

ரூ.12 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்  :
Updated on
1 min read

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே கீழச் சுரண்டையில் உள்ள ஒரு வீட்டில் புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

சுரண்டை போலீஸார் அங்கு சோதனை நடத்தினர். அங்கு பதுக்கி வைத்திருந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக பரன்குன்றாபுரத்தைச் சேர்ந்த ராஜன், அவருக்கு உதவியதாக கீழச்சுரண்டையைச் சேர்ந்த குத்தாலிங்கம், சுடலைக்காசி ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in