பறக்கும் படையினரால் பணம் பறிமுதல் :

பறக்கும் படையினரால் பணம் பறிமுதல்  :
Updated on
1 min read

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டை கைகாட்டி பகுதியில் நேற்று தேர்தல் பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துசெல்லப்பட்ட ரூ.1 லட்சத்து19ஆயிரத்தை பறிமுதல் செய்து.காட்டுன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பணத்தை எடுத்துவந்தவர்கள் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, கரிக்காடு பகுதியை சேர்ந்தகார் ஓட்டுநர் முஹம்மதுயாசின்(46) மற்றும் கார் உரிமையாளர் வடமாநிலத்தை சேர்ந்த ரத்தாராம் (42) என்பதும் கவரிங் நகைகள் வாங்கஅவர்கள் பணத்தை எடுத்து சென்றதாக தெரிய வந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in