துப்பாக்கிச் சுடும் போட்டியில் நாமக்கல் மாணவிக்கு தங்கம் :

துப்பாக்கிச் சுடும் போட்டியில்  நாமக்கல் மாணவிக்கு தங்கம் :
Updated on
1 min read

மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் நாமக்கல்லைச் சேர்ந்த கல்லூரி மாணவி தங்கப்பதக்கம் வென்றார்.

சென்னை ஆவடி அருகே வீராபுரத்தில் கடந்த 2-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை 46-வது மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி மற்றும் 12-வது தென் மண்டல அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி நடைபெற்றது.

இதில், நாமக்கல்லைச் சேர்ந்த கல்லூரி மாணவி பா.ராகவி, 25 மீட்டர் 22 ஸ்போர்ட்ஸ் பிஸ்டல் சீனியர் பிரிவு தனித்திறன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். இவருடைய தங்கை பா.ரசிகாவும் போட்டிகளில் பங்கேற்று அடுத்து நடைபெறவிருக்கும் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். மேலும், நாமக்கல்லைச் சேர்ந்த ஆர்.பாண்டியன், டி.தேவராஜ், ஆர்.மனோஜ் ஆகியோர் 25 மீட்டர் 22 ஸ்டேன்டர்ட் பிஸ்டல் மற்றும் 32 சென்டர் பயர் பிஸ்டல் குழு போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களை துப்பாக்கிச் சுடும் பயிற்சியாளர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in