Published : 17 Mar 2021 03:15 AM
Last Updated : 17 Mar 2021 03:15 AM

தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கை மார்ச் 31 வரை நீட்டிப்பு : இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை

தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கை மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இக்னோ பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக (இக்னோ) சென்னை மண்டல இயக்குநர் கே.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு தொலைதூரக் கல்வி ஜனவரி பருவத்துக்கான சேர்க்கை மார்ச் 31-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. தொலைதூரக்கல்வி படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் (https://ignouadmission.samarth.edu) வாயிலாக விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.ignou.ac.in) அறிந்துகொள்ளலாம். மேலும் பல்கலைக்கழக மண்டல அலுவலகத்தை 044-26618040 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.

இக்னோ தொலைதூரக்கல்வி படிப்புகளில் குறிப்பிட்ட சில இளங்கலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ள எஸ்சி,எஸ்டி வகுப்பினருக்கு கல்விக்கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x