குறிஞ்சிப்பாடி வேட்பாளர் தேர்வில் தகராறு     -  அதிமுக அலுவலகத்தை தாக்கிய 23 பேர் மீது வழக்கு :

குறிஞ்சிப்பாடி வேட்பாளர் தேர்வில் தகராறு - அதிமுக அலுவலகத்தை தாக்கிய 23 பேர் மீது வழக்கு :

Published on

கடலூரில் அதிமுக அலுவலகத்தை தாக்கிய அதிமுக கடலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட 23 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரான கடலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிசாமி மாற்றப்பட்டு முன்னாள் அமைச்சர் செல்விராமஜெயம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டர். இதனால் ஆத்திரமடைந்த பழனிசாமி ஆதரவாளர்கருடன் கடலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தை நேற்று முன்தினம் அடித்துஉடைத்தனர். அமைச்சர் சம்பத்தின் ஆதரவாளர்கள் பாதிரிகுப்பம் பத்பநாபன்(30), முதுநகர் பாண்டியன்(40), சாலக்கரை கிருஷ்ணராஜ், பெரியகாட்டுபாளையத்தை சேர்ந்த ஆனந்தராஜ்(35) ஆகிய 4 பேர் தாக்கப்பட்டனர். திருப்பாதிரிபுலியூர் காவல் நிலைய போலீஸார் பழனிசாமி உள்ளிட்ட 23 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அமைச்சர் சம்பத், பழனிசாமி வீடுகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in