முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அழைப்பு :

முன்னாள்  ராணுவ வீரர்களுக்கு அழைப்பு  :
Updated on
1 min read

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் அறிக்கை:

சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக காவல் துறையினருடன் இணைந்து பணியாற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் முன்வர வேண்டும். தேர்தல் பணிக்காக வரும் முன்னாள் ராணுவத்தினரின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களது இருப்பிடத்தின் அருகிலேயே தேர்தல் பணி அமைத்து தரப்படும். வீண் அலைச்சல்கள் முற்றிலும் தவிர்க்கப்படும். எனவே, தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து முன்னாள் ராணுவ வீரர்களும் தேர்தல் பணியாற்ற முன்வந்து, அருகில் உள்ள காவல் நிலையங்களில் தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு தெரி விக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in