விருதுநகரில் நடந்து சென்ற மூதாட்டியிடம் : நூதன முறையில் 5 பவுன் அபகரிப்பு :

விருதுநகரில் நடந்து சென்ற மூதாட்டியிடம்  : நூதன முறையில் 5 பவுன் அபகரிப்பு :
Updated on
1 min read

விருதுநகர் என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்தவர் நாகஜோதி (65). வாடியான் மாதா கோயில் தெருவில் உள்ள ஒரு கோயிலுக்கு வந்துவிட்டு அருப்புக்கோட்டை மேம்பாலம் கீழ் பகுதியில் நேற்று காலை நடந்து சென்றார்.

அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், முகக் கவசம் அணியாமல் சென்றால் அபராதம் விதிப்பார்கள் என்றும், தான் காவலர் என்றும் கூறியுள்ளார். அதோடு, தனியாக நடந்து செல்லும்போது கழுத்தில் தங்க நகைகள் அணிந்து செல்லக் கூடாது என்றும், அதை வாங்கி ஒரு காகிதத்தில் சுற்றிக்கொடுத்துவிட்டு அங்கிருந்து அந்த நபர் தப்பினார். சந்தேகம் அடைந்த நாகஜோதி தனது கையிலிருந்த காகிதத்தை பிரித்துப் பார்த்தபோது 5 பவுன் தங்கச் சங்கிலி இல்லை.

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த நாகஜோதி இதுகுறித்து விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in