தடுப்பணையை அகற்றக்கோரி - அனுமந்தராயன் கோட்டையில் வீடுகளில் கருப்புக்கொடி :

தடுப்பணையை அகற்றக் கோரி அனுமந்தராயன்கோட்டையில் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்த மக்கள்.
தடுப்பணையை அகற்றக் கோரி அனுமந்தராயன்கோட்டையில் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்த மக்கள்.
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்டம், செம் பட்டி அருகேயுள்ள ஆத்தூர் நீர்த் தேக்கத்துக்கு வரக்கூடிய தண்ணீரைத் தடுக்கும் வகை யில் அமைக்கப்பட்டுள்ள தடுப் பணையை அகற்றக் கோரி, அனுமந்தராயன்கோட்டை உள் ளிட்ட கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தடுப்பணையை அகற்றினால் தான் அனுமந்தராயன் கோட்டை மற்றும் சுற்றுப்புற கிராம மக்க ளின் குடிநீர், பாசனத்துக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இது தொடர்பாக போராட்டம் நடத்திய மக்கள் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனுமந்தராயன்கோட்டை கிராம மக்கள் வீடுகள் தோறும் கருப்புக்கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். வழக்கு களை வாபஸ் பெறாவிட்டால் சட்டப் பேரவைத் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள் ளோம் என கிராம மக்கள் தெரி வித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in