Published : 15 Mar 2021 03:13 AM
Last Updated : 15 Mar 2021 03:13 AM

மின் தடையை கண்டித்து நள்ளிரவில் பொதுமக்கள் மறியல் :

பெரம்பலூர் அருகே மின் தடையைக் கண்டித்து நேற்று முன்தினம் நள்ளிரவில் பொது மக்கள் சாலைமறியலில் ஈடு பட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம் அரணாரை பிரிவு சாலை, கல்யாண் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யும் மின்மாற்றி கடந்த மார்ச் 12 -ம் தேதி வெடித்ததையடுத்து, அப்பகுதியில் மின்சாரம் தடைபட்டது. இதுகுறித்து மின் வாரியத்துக்கு அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். ஆனால், நேற்று முன்தினம் இரவு 11 மணி ஆகியும் மின் விநியோகம் சரி செய்யப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள், பெரம்பலூர்-துறையூர் சாலையில் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பெரம்பலூர் போலீஸார் மற்றும் மின்வாரிய அலுவலர்கள், மறியலில் ஈடு பட்டவர்களிடம் நடத்திய பேச் சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x