சுற்றுச்சுவரில் இருந்து : தவறி விழுந்தவர் உயிரிழப்பு :

சுற்றுச்சுவரில் இருந்து : தவறி விழுந்தவர் உயிரிழப்பு :
Updated on
1 min read

வேலூர் அடுத்த மூஞ்சூர்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ் (37). இவர், கடந்த 28-ம் தேதி தனது வீட்டின் அருகேயுள்ள வாழை மரத்தில் உள்ள இலையை பறிக்க அங்கிருந்த சுற்றுச்சுவர் மீது ஏறினார். அப்போது, கால் இடறி தவறி விழுந்து காயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொதுமருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி யுவராஜ் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேலூர் கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in