நாமக்கல்லில் ஒரு மாதத்தில் போக்குவரத்து விதிமீறியதாக ரூ. 2.94 லட்சம் அபராதம் வசூல் :

நாமக்கல்லில் ஒரு மாதத்தில் போக்குவரத்து  விதிமீறியதாக ரூ. 2.94 லட்சம் அபராதம் வசூல்  :
Updated on
1 min read

நாமக்கல்: நாமக்கல்லில் போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பாக வாகன உரிமையாளர்களிடம் ரூ.2 லட்சத்து 94 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.

நாமக்கல் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் கடந்த ஒரு மாதமாக தொடர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். இதில் மொத்தம் 1,804 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன. இதில், 328 வாகனங்கள் பல்வேறு விதிமுறைகளை மீறி இயக்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும், சாலை வரி கட்டாமல் இயக்கிய வாகனங்கள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி இயக்கிய வாகனங்கள் கண்டறியப்பட்டு ரூ.2 லட்சத்து 94 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டது. மேலும், 10 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன, என வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in