Published : 13 Mar 2021 03:13 AM
Last Updated : 13 Mar 2021 03:13 AM

கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் முதல் நாளில் 3 பேர் மனுத்தாக்கல் :

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நேற்று முதல் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. நேற்று முக்கிய அரசியல் கட்சிப் பிரமுகர்கள் எவரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவைத் தொகு தியில் சுயேட்சையாக பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்த கே.அரசன் என்பவர் மட்டும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

கடலூர்

கடலூர் தொகுதியில் அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியில் பாலமுருகன் என்பவர் சுயேட்சையும் மனுத்தாக்கல் செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் நேற்று மொத்தம் 2 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x