Published : 13 Mar 2021 03:13 AM
Last Updated : 13 Mar 2021 03:13 AM

ராமநாதபுரம் அருகே மரத்தின் மீது பைக் மோதி 2 பேர் மரணம் :

ராமநாதபுரம் அருகே சாலையோர மரம் மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்துக் குள்ளானதில் இளைஞர்கள் இருவர் உயிரி ழந்தனர்.

ராமநாதபுரம் அல்லிக்கண்மாய் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கர்ணன் மகன் மணிமாறன்(24). அதே பகுதியைச் சேர்ந்த காளியப்பன் மகன் கார்த்திக்(25). இருவரும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்தனர். நேற்று காலை இருவரும் தேர்போகி பகுதியில் உள்ள கோயிலுக்குச் சென்றனர். பின்னர் நேற்று மாலை இரு சக்கர வாகனத்தில் ராமநாதபுரம் நகருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தனர். மணிமாறன் வாகனத்தை ஓட்டியுள்ளார்.

கோகிலவாடி வளைவில் சென்றபோது திடீரென இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பனைமரத்தில் மோதி விபத்துக் குள்ளானது. இதில் மணிமாறன், கார்த்திக் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். மருத்து வமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இருவரும் உயிரிழந்தனர்.

தேவிபட்டினம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x