100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி - பெரம்பலூரில் விழிப்புணர்வு மினி மாரத்தான் :

100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி -  பெரம்பலூரில் விழிப்புணர்வு மினி மாரத்தான் :
Updated on
1 min read

சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் பெரம்பலூரில் நேற்று நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ப. வெங்கட பிரியா நேற்று பாலக் கரை பகுதியில் மினி மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த ஓட்டத்தில் கலந்து கொண்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், 100 சதவீதம் வாக்களிப்போம், ஜனநாயக கடமை ஆற்றுவோம், எனது ஓட்டு எனது உரிமை போன்ற வாசகங்கள் பொறித்த உடைகளை அணிந்திருந்தனர். இந்த மினி மாரத்தான் ஓட்டம் பாலக்கரை, வெங்கடேசபுரம், சங்குப்பேட்டை, பழைய பேருந்து நிலையம், துறை யூர் சாலை, அரசு மருத்துவமனை வழியாக சென்று வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.

இதில், விளையாட்டு விடுதி மேலாளர் ஜெயக்குமாரி, தடகளப் பயிற்றுநர் கோகிலா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in