குடிபோதையில் தீவைத்துக் கொண்டவர் உயிரிழப்பு :

குடிபோதையில் தீவைத்துக் கொண்டவர் உயிரிழப்பு :
Updated on
1 min read

கரூர் மாவட்டம் தாளப்பட்டி கூலநாயக்கனூர் காலனியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(40). இவரது மனைவி தேவி(39). சுப்பிரமணி கடந்த 10-ம் தேதி குடிபோதையில் வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதன்பின்னர், தன்மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீயிட்டுக் கொண்டார். இதையடுத்து கரூர் அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுப்பிரமணி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். அரவக்குறிச்சி போலீஸார் விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in