ரயில்வே கோட்டத்துக்கு இடையேயான - கபடி போட்டியில் திருச்சி அணி வெற்றி :

கபடி போட்டியில் வெற்றி பெற்ற திருச்சி அணி வீரர்களிடம் கோப்பையை வழங்கிய மதுரை கோட்ட மேலாளர் லெனின்.
கபடி போட்டியில் வெற்றி பெற்ற திருச்சி அணி வீரர்களிடம் கோப்பையை வழங்கிய மதுரை கோட்ட மேலாளர் லெனின்.
Updated on
1 min read

தெற்கு ரயில்வே அளவில் 6 ரயில்வே கோட்டங்களுக்கு இடையே ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்களுக்கான 29-வது கபடி போட்டி மதுரை அரசரடி ரயில்வே மைதானத்தில் நடைபெற்றது.

இதில் சென்னை, திருச்சி, சேலம், மதுரை ஆகிய கோட்டங் களைச் சேர்ந்த ரயில்வே பாது காப்புப் படை கபடி வீரர்கள் பங்கேற்றனர். கரோனா தொற்று காரணமாக பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய கோட்டங் கள் பங்கேற்கவில்லை. மதுரை, திருச்சி கோட்ட அணி வீரர்கள் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றனர்.

இறுதிப் போட்டியில் 28 : 23 புள் ளிகள் கணக்கில் திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் மதுரை கோட்ட வீரர்களை வென்று சுழற் கோப்பையைக் கைப்பற்றினர். திருச்சி அணியின் கேப்டன் கார்த் திக்கிடம் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் வி‌.ஆர்.லெனின் சுழற் கோப்பையை வழங்கினார்.

விழாவில் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் லலித் குமார் மன்சுகாணி, கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி வி.ஜே.பி. அன்பரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in