Published : 12 Mar 2021 03:13 AM
Last Updated : 12 Mar 2021 03:13 AM

சர்வீஸ் சாலையை தார்சாலையாக அமைக்க கோரி மறியல் :

அரியலூர் மாவட்டம் வி.கைகாட் டியில் திருச்சி-சிதம்பரம், அரி யலூர்-புரந்தான் சாலைகள் சந்திப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியில் தற்போது, திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம், உயர்நிலை பாலம் கட்டும் பணிகள் நடை பெற்று வருகின்றன. இதனால், அப்பகுதியில் சர்வீஸ் சாலை கள் மண்ணால் அமைக்கப்பட் டுள்ளன. இந்த சர்வீஸ் சாலையில் வாகனம் செல்லும்போது, புழுதி கிளம்பி அப்பகுதி மக்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற் படுத்தி வருகிறது.

இந்நிலையில், சர்வீஸ் சாலையை உடனடியாக தார் சாலையாக அமைத்து, புழுதி ஏற்படா வண்ணம் தடுக்க வேண் டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். கயர்லாபாத் போலீ ஸார், உரிய நடவடிக்கை எடுக் கப்படும் என தெரிவித்ததால், அனைவரும் கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x