மினி வேனில் கொண்டு சென்ற ரூ.2.57 லட்சம் ரொக்கம் பறிமுதல் :

மினி வேனில் கொண்டு சென்ற ரூ.2.57 லட்சம் ரொக்கம் பறிமுதல்  :
Updated on
1 min read

கரூர் மாவட்டம் குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதிக்கான பறக்கும் படையினர் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் மருதூர் சோதனைச் சாவடியில் நேற்று வாகன சோதனை நடத்தினர்.

அப்போது, அவ்வழியே கரூர் மாவட்டம் நெரூர் வடபாகத்தைச் சேர்ந்த வாத்து வியாபாரி வைரப்பெருமாள்(49) சென்ற மினி வேன் சோதனைச் சாவடியில் நிற்காமல் சென்றது. இதையடுத்து, பறக்கும்படையினர் வேனை விரட்டிச் சென்று பிடித்து சோதனையிட்டனர். இதில், உரிய ஆவணங்களின்றி ரூ.2.57 லட்சம் கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்த தொகை பறிமுதல் செய்யப்பட்டு, குளித்தலை வட்டாட்சியர் கலியமூர்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in