விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை ரூ. 23.82 லட்சம் பறிமுதல் :

விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை ரூ. 23.82 லட்சம் பறிமுதல்  :
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை செய்தியாளர்களிடம் கூறியது: விழுப்புரம் மாவட்டம் முழுவதும் இதுவரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.23 லட்சத்து 82 ஆயிரத்து 310 ரொக்கம் மற்றும் ரூ.4 லட்சத்து 14 ஆயிரத்து 701 மதிப்பிலான பொருட்கள் என மொத்தம் ரூ.27 லட்சத்து 97 ஆயிரத்து 11 மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ளவர்கள் தேர்தல் ஆணைய விதிமுறையின்படி 195 துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனர். 19 துப்பாக்கிகள் மட்டும் உரிய அனுமதியுடன் வங்கிகளில் உள்ளன என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in