கெடமலை மலைக்கிராமத்தில் - வாக்குச்சாவடியில் வசதிகள் ஆட்சியர் நேரில் ஆய்வு :

கெடமலை கிராம வாக்குச்சாவடியில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல்பாடுகள் குறித்து செயல்விளக்கம் செய்து காண்பிக்கவும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் வாக்குவச்சாவடி அலுவலர்களுடன் சென்றார்.
கெடமலை கிராம வாக்குச்சாவடியில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல்பாடுகள் குறித்து செயல்விளக்கம் செய்து காண்பிக்கவும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் வாக்குவச்சாவடி அலுவலர்களுடன் சென்றார்.
Updated on
1 min read

நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் (தனி) சட்டப்பேரவை தொகுதியில் 332 வாக்குசாவடிகள் உள்ளன. இத்தொகுதிக்கு உட்பட்ட வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம் போதமலை கீழுர் ஊராட்சிக்குட்பட்ட கீழுர் வாக்குச்சாவடியில் 899 வாக்காளர்கள் உள்ளனர்.

இதுபோல் கீழுர் ஊராட்சிக்குட்பட்ட கெடமலை வாக்குச்சாவடியில் 322 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு அடிப்படை வசதிகள் உள்ளனவா என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் ஆய்வு செய்தார். அப்போது வாக்குச்சாவடியில் குடிநீர் வசதி, வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வுதள வசதி போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தார்.

தொடந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிக்கும் முறை மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் விவிபேட் இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்தும் மலைக் கிராம மக்களுக்கு அலுவலர்கள் செயல்விளக்கம் அளித்தனர். வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர், உதவி வட்டாட்சியர் உள்பட தேர்தல் பிரிவு அலுவலர்கள் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in