விபத்துகளில் 2 பேர் உயிரிழப்பு :

விபத்துகளில்  2 பேர் உயிரிழப்பு  :
Updated on
1 min read

ஆலங்குளம் அருகே உள்ள இலந்தைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம் (54). இவர், ஆலங்குளம் புதுப்பட்டி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது, நிலை தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்தார்.

வாசுதேவநல்லூர் கலைஞர் காலனியைச் சேர்ந்தவர் பால்சாமி(50). இவர், இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மினி பஸ் மோதியதில் பலத்த காயம் அடைந்த அவர், புளியங்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வாசுதேவநல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in