மனு தாக்கல் செய்ய முன் அனுமதி பெற அறிவுறுத்தல் :

மனு தாக்கல் செய்ய முன் அனுமதி பெற அறிவுறுத்தல்  :
Updated on
1 min read

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறு கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை (12-ம் தேதி) தொடங்குகிறது. .

ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான சமீரன் தலைமை வகித்து கூறியதாவது:

வேட்புமனு தாக்கலின்போது 2 வாகனங்கள் மட்டுமே வர வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே உடனிருக்க வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் நாள், நேரத்தை முன்கூட்டியே சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு தெரிவித்தால், முன் அனுமதி வழங்கி நேரம் ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம் தனிமனித இடைவெளி பராமரிக்கப்படும். தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை கடையநல்லூர் வட்டம் கொடிக்குறிச்சியில் உள்ள யுஎஸ்பி கல்லூரியில் நடைபெறும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in