Published : 10 Mar 2021 03:12 AM
Last Updated : 10 Mar 2021 03:12 AM

விவசாயி தீக்குளிக்க முயற்சி :

திண்டுக்கல்

வேடசந்தூர் அருகே கன்னிமேங்கம் பட்டியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது பெரியம்மா மாரியம்மாள். இவருக்கு கணவர், வாரிசுகள் இல்லாததால் சக்திவேல் அவரை பராமரித்தார். இந்நிலையில் அவர் இறந்ததும் அவரது 6.5 ஏக்கர் நிலத்தை வாரிசு அடிப்படையில் தனது பெயருக்கு சக்திவேல் பட்டா மாற்றம் செய்தார். இதையறிந்த சக்திவேலின் உறவினர்கள் நிலத்தை ஆளும்கட்சி பிரமுகர் ஆதரவோடு அபகரிக்க முயன்ற னர். இதைக் கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற அவரை போலீஸார் மீட்டு விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x