தேர்தல் பணிக்கு முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு :

தேர்தல் பணிக்கு முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு :
Updated on
1 min read

தேர்தல் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீர்கள் நியமிக்கப்பட உள்ளனர், என நாமக்கல் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கா.மெகராஜ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்கள் சிறப்பு காவலர் அலுவலராக ஈடுபடுத்தப்பட உள்ளனர். விருப்பமுள்ள நாமக்கல் மாவட்ட முப்படையைச் சார்ந்த முன்னாள் இளநிலை படை அலுவலர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள் நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்திற்கு நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in