மனைவியை கொன்ற கணவருக்கு 5 ஆண்டு சிறை :

மனைவியை கொன்ற கணவருக்கு 5 ஆண்டு சிறை :
Updated on
1 min read

மனைவியை கொலை செய்த கணவருக்கு நாமக்கல் மகளிர் நீதிமன்றத்தில் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திருச்செங்கோடு அருகே தேவனாங்குறிச்சியைச் சேர்ந்தவர் பழனிசாமி (57). இவரது மனைவி சுசிலா ( 56). இவர்களது மகள் லாவண்யா (25). பழனிசாமிக்கு மது பழக்கம் இருந்துள்ளது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி மனைவி சுசிலாவிடம், பழனிசாமி மது குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது மனைவியை தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக மகள் லாவண்யா அளித்த புகாரின் பேரில் திருச்செங்கோடு புறநகர் காவல் துறையினர் பழனிசாமியை கைது செய்தனர். இந்த வழக்கு நாமக்கல் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று வழக்கின் மீது தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், மனைவியை கொலை செய்த பழனிசாமிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in