Published : 09 Mar 2021 03:12 AM
Last Updated : 09 Mar 2021 03:12 AM

மருந்து கிடங்கில் பணம் திருட்டு :

திருச்சி உறையூரைச் சேர்ந்த சிவநேசன் பெரம்பலூர் மாவட்டம் வெங்கடேசபுரம் பகுதியில் மருந்து கிடங்கு வைத்துள்ளார். இந்த கிடங்கின் பூட்டு உடைக்கப்பட்டு, அங்கிருந்த ரூ.70 ஆயிரம் பணம், 2 செல்போன்கள், ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் திருடப்பட்டிருந்தது நேற்று தெரியவந்தது.

பெரம்பலூர் போலீஸார் அங்குள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x