விபத்தில் மத போதகர், மனைவி மரணம் :

விபத்தில் மத போதகர், மனைவி மரணம் :
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் அருகேயுள்ள மேலசிவந்திபுரத்தைச் சேர்ந்தவர் சுந்தர் (55). கிறிஸ்தவ மதபோதகர். இவரது மனைவி அன்னபாக்கியம் (50). இவர்களது பேத்தி ஷெர்லிட் (3). இவர்கள் மூவரும்மொபட்டில் வி.கே.புரத்திலிருந்து களக்காடுக்கு சென்றுகொண்டிருந்தனர். சேரன்மகாதேவி அருகே கங்கனாங்குளத்தை அடுத்துள்ள குரங்குமடம் என்ற இடத்தில் எதிரே வந்த லோடு ஆட்டோ, இவர்களது மொபட் மீது மோதியது. இதில்தூக்கிவீசப்பட்டு பலத்த காயமடைந்த சுந்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லும் வழியில் அன்னபாக்கியம் உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ஷெர்லிட் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சேரன்மகாதேவி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in