Published : 09 Mar 2021 03:13 AM
Last Updated : 09 Mar 2021 03:13 AM

மகளிர் தின விழாவில் - பெண் மருத்துவர்களுக்கு பாராட்டு :

செஞ்சிலுவை சங்க பேரணாம்பட்டு கிளை சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் வட்டார பெண் மருத்துவர்கள் பாராட்டப்பட்டனர்.

செங்சிலுவை சங்கம் பேரணாம்பட்டு கிளை சார்பில் பத்தலப்பல்லி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உலக மகளிர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. செஞ் சிலுவை சங்க கிளை செயலாளர் பொன்.வள்ளுவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய பேரணாம்பட்டு வட்டார மருத்துவர்கள் கனிமொழி, சண்முக பிரியா ஆகியோர் பாராட்டப்பட்டனர்.

அதேபோல், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியைகள் பானு, ஸ்டெல்லா ஹேமா பாய், நூறு நாள் வேலை திட்ட பணிதள பொறுப்பாளர் சசி, ஹேண்ட் இன்ஹேண்ட் சிறப்பு ஆசிரியர் பொன்னரசி ஆகியோரின் பணியினை பாராட்டியதுடன், நிகழ்ச்சியில் பங்கேற்ற 100 மகளிருக்கு இனிப்பும், ரோஜாப்பூவும் வழங்கி கவுர விக்கப்பட்டனர்.

இறுதியாக மருத்துவர்கள் கனிமொழி, சண்முக பிரியா ஆகியோர் ஏற்புரை நிகழ்த்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x