ஆலங்குளம் அருகே பெண் படுகொலை :

ஆலங்குளம் அருகே பெண் படுகொலை  :
Updated on
1 min read

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள பூலாங்குளம் கிராமத்தில் ஆறுமுக நயினார் என்பவருக்குச் சொந்தமான கொய்யாத் தோப்பு உள்ளது. இங்கு கிடந்த ஒரு மூட்டையில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தனர்.

மூட்டையை அவிழ்த்து பார்த்தபோது, அதில் பெண் சடலம் இருந்தது தெரியவந்தது.

அவருக்கு சுமார் 40 வயது இருக்கும். யாரோ மர்ம நபர்கள் அவரை கொலை செய்து, முகத்தை சிதைத்து மூட்டையாக கட்டி, கொய்யாத் தோப்பில் வீசிச் சென்றது தெரியவந்தது.

சம்பவ இடத்துக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங், ஆலங்குளம் டிஎஸ்பி பொன்னிவளவன் உள்ளிட்டோரும் சென்று விசாரணை நடத்தினர்.

கொலையான பெண் யார்?, கொலையாளிகள் யார்? என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in