திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம்: மு.லெட்சுமி அருண்
Regional01
விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் :
டெல்லியில் 100 நாட்களாக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் டி.செல்லத்துரை தலைமை வகித் தார். பொருளாளர் முருகன் முன் னிலை வகித்தார். சிஐடியூ மாவட்ட துணைத் தலைவர் சுடலைராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
