வேலூர் சட்டப்பேரவை தொகுதியில் - வாகன தணிக்கையை அதிகரிக்க உத்தரவு :

வேலூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பறக்கும் படை மற்றும் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினருடன் ஆலோசனை நடத்திய கோட்டாட்சியர் கணேஷ். அருகில், வட்டாட்சியர் ரமேஷ் உள்ளிட்டோர். படம்: வி.எம்.மணிநாதன்.
வேலூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பறக்கும் படை மற்றும் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினருடன் ஆலோசனை நடத்திய கோட்டாட்சியர் கணேஷ். அருகில், வட்டாட்சியர் ரமேஷ் உள்ளிட்டோர். படம்: வி.எம்.மணிநாதன்.
Updated on
1 min read

வேலூர் சட்டப்பேரவை தொகுதியில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் வாகன தணிக்கையை அதிகரிக்க உத்தரவிடப் பட்டுள்ளது.

வேலூர் சட்டப்பேரவை தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலராக வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கணேஷ்நியமிக்கப்பட்டுள்ளார். தொகுதியில் ஆவணங்கள் இல்லாமல் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் எடுத்துச் செல்வதை தடுக்க 3 தேர்தல் நிலை கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 3 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வேலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கணேஷ் தலைமையில் பறக்கும் படை மற்றும் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினருக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, குழுக் களின் செயல்பாடுகளை தேர்தல் நடத்தும் அலுவலர் கணேஷ் ஆய்வு செய்ததுடன், வரும் நாட்களில் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டார். இதில், வேலூர் வட்டாட்சியர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in