திருப்பத்தூர் அருகே - மகனை இரும்பு ராடால் அடித்து கொலை செய்த தந்தை கைது :

திருப்பத்தூர் அருகே  -  மகனை இரும்பு ராடால் அடித்து கொலை செய்த தந்தை கைது :
Updated on
1 min read

திருப்பத்தூர் அருகே மதுபானம் அருந்த பணம் கேட்டு தகராறில் ஈடுபட்ட மகனை இரும்பு ராடால் அடித்து கொலை செய்த தந்தையை காவல் துறையினர் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் பெரியகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெல்டிங் தொழிலாளி செல்வராஜ் (45). இவரது மனைவி அம்பிகா, மகன் விக்னேஷ் (18). விக்னேஷ்-க்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது. இதனால், இரவு நேரத்தில் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்த விக்னேஷ் மதுபானம் அருந்துவதற்கு பணம் கேட்டு பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும், தந்தை செல்வராஜை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திர மடைந்த செல்வராஜ் அருகே இருந்த இரும்பு ராடால் மகனை தாக்கியுள்ளார். இதில், தலையில் பலத்த காயம் அடைந்த விக்னேஷ் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

தலையில் ரத்த காயங்களுடன் இருந்த அவரை பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் விக்னேஷ் சிகிச்சைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்தது தெரியவந்தது. இது தொடர்பாக கந்திலி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து செல்ராஜை நேற்று காலை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in