முதியவரை கொன்ற இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது :

முதியவரை கொன்ற இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது :
Updated on
1 min read

விழுப்புரம் அருகே முதியவரை கொன்ற இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் அருகே அசோகபுரி கிராமத்தைச் சேர்ந்தவர்அன்பழகன் மகன் அருள் மொழி(25). இவர் கடந்த மாதம் 9-ம் தேதி குண்டலப்புலியூர் அரிசி கிடங்கில் பாதுகாப்புப்பணியில் இருந்த பூரிக்குடிசைகிராமத்தைச் சேர்ந்த தேவசகாயம் (65) என்பவரை தாக்கினார். இதில் படுகாயமடைந்த தேவசகாயம் கடந்த மாதம் 14-ம் தேதி உயிரிழந்தார். இதே போல குண்டலப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வனத்துறை ஊழியர் சாமிக்கண்ணு (70) என்பவரையும் அருள்மொழி தாக்கியுள்ளார். இது குறித்து கெடார் போலீஸார் அருள்மொழி மீது தனித்தனியாக 2 வழக்குகள் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இவர்மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடுமாறு ஆட்சியருக்கு எஸ் பிராதாகிருஷ்ணன் பரிந்துரைசெய்தார். இதனை ஏற்றுக்கொண்ட ஆட்சியர் அண்ணா துரை, அருள்மொழியை குண்டர்சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை கடலூர் மத்திய சிறையில் உள்ள அருள்மொழியிடம் கெடார் போலீஸார் சிறை ஊழியர்கள் மூலம் நேற்று வழங்கினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in