தீமிதி திருவிழா :

தீமிதி திருவிழா :
Updated on
1 min read

பெரம்பலூரை அடுத்துள்ள கவுள்பாளையம் கிராமத்தில் பழமை வாய்ந்த காளியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நேற்று விமரி சையாக நடைபெற்றது.

காளியம்மன் கோயிலில் நிகழாண்டுக்கான தீமிதி திரு விழா கடந்த பிப்.23-ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கி யது. முக்கிய நிகழ்வான தீமிதிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கவுள் பாளையம் ஊர் எல்லைப் பகுதியிலிருந்து கரகம் பாலித்து, முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்து காளியம்மன் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in