Published : 05 Mar 2021 03:17 AM
Last Updated : 05 Mar 2021 03:17 AM

திருமானூர் அருகே 2 ஏக்கர் கரும்பு தீயில் எரிந்து சேதம் :

திருமானூர் அருகே 2 ஏக்கர் கரும்பு தீயில் எரிந்து சேதமடைந்தது.

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள செங்க ராயன் கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சின்னமணி. இங்கு கரும்பு பயிரிடப்பட்டுள்ள இவரது வயலில் நேற்று முன்தினம் திடீரென தீப்பிடித்தது. அப்போது, காற்று வீசியதால் தீ மளமளவென பரவி கரும்புகள் முழுவதும் எரியத் தொடங்கின. தகவலறிந்த அரியலூர் தீயணைப்பு நிலையத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

எனினும், 2 ஏக்கர் கரும்பு தீயில் எரிந்து சேதமடைந்தது. கரும்பு வயலுக்கு மேலே உள்ள மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசியதில் தீப்பொறி விழுந்து இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x