Published : 05 Mar 2021 03:17 AM
Last Updated : 05 Mar 2021 03:17 AM

விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா :

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான 2019-20-ம் கல்வியாண்டுக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் கா.பிச்சுமணி தலைமை வகித்தார். பதிவாளர் (பொறுப்பு) அர. மருதகுட்டி வாழ்த்துரை வழங்கினார்.

பெண்கள் விளையாட்டு போட்டி ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டி செலின் மேரி வரவேற்றார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் ஆண்கள் பிரிவில் முதல் இடத்தை தூத்துக்குடி வ. உ.சிதம்பரனார் கல்லூரியும், 2-ம் இடத்தை பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியும், 3-ம் இடத்தை நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியும், 4-வது இடத்தை நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியும் பிடித்தன.

பெண்கள் பிரிவில் முதல் இடத்தை தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் கல்லூரியும், 2-ம் இடத்தை குற்றாலம் பராசக்தி பெண்கள் கல்லூரியும், 3-ம் இடத்தை திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியும், 4-வது இடத்தை தூத்துக்குடி ஏ.பி.சி மகாலட்சுமி பெண்கள் கல்லூரியும் பிடித்தன. வெற்றி பெற்ற கல்லூரிகளுக்கு பரிசு வழங்கப் பட்டது.அகில இந்திய அளவில் போட்டிகளிலும், கேலோ இந்தியா பல்கலைக்கழக போட்டிகளிலும் கலந்துகொண்டு வெற்றிபெற்ற சேது மாணிக்கவேல், தர்ஷினி, ஆரோக்கிய அலிஸ், கிரேஸினா ஜி மெர்லி ஆகியோருக்கும் பரிசு வழங்கப்பட்டது. விளையாட்டு மைய இயக்குநர் செ. துரை நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x