Published : 02 Mar 2021 03:13 AM
Last Updated : 02 Mar 2021 03:13 AM

கோவை ஆட்சியர் அலுவலகத்தில்தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு

கோவை: கோவை மாவட்டத்தில் தேர்தல் விதிமீறலை தடுக்க 60 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறும்போது,‘‘மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முதல் தளத்தில் 24 மணி நேரமும் இயங்கும், தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் கையகப்படுத்தல்) அசோகன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினருடன் இம்மையம் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக 1800 425 4757 என்ற கட்டணமில்லா எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x