வாய்க்காலில் மூழ்கி மாயமானவரை2-வது நாளாக தேடும் பணி தீவிரம்

வாய்க்காலில் மூழ்கி மாயமானவரை2-வது நாளாக தேடும் பணி தீவிரம்

Published on

நசியனூர் அருகே வாய்க்காலில் குளிக்கச் சென்று மாயமான ஆட்டோ ஓட்டுநரை 2-வது நாளாக தீயணைப்புப் படையினர் நேற்று தேடினர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சாலை, கதிர் லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகணபதி (45). ஆட்டோ ஓட்டுநரான இவர், தனது இரு மகள்களுடன் நசியனூர் பெரிய வாய்க்காலில் நேற்று முன் தினம் குளிக்கச் சென்றார். இதில், நீரில் மூழ்கிய மாணவி அனு உயிரிழந்தார். அவரைக் காப்பாற்றச் சென்ற செல்வகணபதி மாயமானார்.

பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலர் ரவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், தேடும் பணியில் ஈடுபட்டனர்.

வாய்க்காலில் நீரோட்டம் வேகமாக இருப்பதால், அவர் நீண்டதூரம் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். இரண்டாவது நாளாக செல்வகணபதியை தேடும் பணி தொடர்ந்து வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in