தேர்தல் பாதுகாப்புப்பணி முன்னாள் வீரர்களுக்கு அழைப்பு

தேர்தல் பாதுகாப்புப்பணி முன்னாள் வீரர்களுக்கு அழைப்பு
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நல அலுவலர் அருள்மொழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:

சட்டமன்ற தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட விருப்பம் உள்ள விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள முன்னாள் படைவீரர்கள் விழுப்புரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் தங்கள் பெயரினை பதிவு செய்யலாம். இதற்கு, அசல் படைவிலகல் சான்று,முன்னாள் படைவீரர் அடையாள அட்டையுடன் பெயரினை பதிவு செய்ய வேண்டும். நல்ல உடல்நிலையுடன் 60 வயதிற்கு உட்பட்ட முன்னாள் வீரர்களாக இருக்க வேண்டும். மேலும் கட்டாயமாக கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இலவசமாக தடுப்பூசி போடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in