Published : 01 Mar 2021 03:17 AM
Last Updated : 01 Mar 2021 03:17 AM

நல்ல காரியங்களுக்கு உதவினால் தொழில் சிறந்து செல்வம் பெருகும்  விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளாசி

திருச்சி

நல்ல காரியங்களுக்கு உதவி னால், செய்யும் தொழில் சிறந்து, செல்வம் பெருகும் என  விஜ யேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்துக்கு தமிழகம் மற்றும் கேரளாவில் பக்தர்களிடமிருந்து பல்வேறு இந்து அமைப்பு கள் மூலம் நன்கொடையாக பெறப்பட்ட நிதியை, கோயில் கட்டுமானப் பணியை மேற் கொண்டிருக்கும் ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளைக்கு வழங்கும் நிகழ்ச்சி ரங்கம் விஸ்வ ஹிந்து சேவா சமிதியில் நேற்று நடைபெற்றது.

இந்த நிதியை பெற்றுக் கொண்ட பின், காஞ்சி காம கோடி பீடாதிபதி  விஜயேந் திர சரஸ்வதி சுவாமிகள் பேசியது: லட்சிய புருஷராக வாழ்ந்து காட்டிய ராமருக்கு அயோத்தியில் பெரும் பொருட் செலவில் கட்டப்படும் கோயி லுக்கு நாடெங்கும் உள்ள பக்தர்கள் நன்கொடை அளித்து வருகின் றனர். நல்ல காரியங்களுக்கு செலவிடும்போது அது பல மடங்காக திரும்பி வரும் என்பது நம்பிக்கை.

அதன்படி, ராமர் கோயில் கட்டுமானத்துக்கு இதுவரை உதவியவர்கள் மற்றும் இனி உதவ உள்ளவர்கள் அனைவருக்கும் ராமரின் அருளால் செய்யும் தொழில் சிறந்து செல்வம் பெருகும் என்றார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆர்எஸ்எஸ் மாநில அமைப்பாளர் சேதுராமன் உள்ளிட்டோர் செய்தி ருந்தனர்.

ஆர்எஸ்எஸ், விஎச்பி, இந்து முன்னணி, சேவாபாரதி, பஜ்ரங்தள் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x