வெள்ளி வியாபாரியிடம் ரூ.1.50 லட்சம் பறித்த 2 இளைஞர்கள் கைது

வெள்ளி வியாபாரியிடம்  ரூ.1.50 லட்சம் பறித்த 2 இளைஞர்கள் கைது
Updated on
1 min read

சேலத்தில் கத்தியைக் காட்டி மிரட்டி வெள்ளி வியாபாரியிடம் ரூ.1.50 லட்சத்தை பறித்த இரு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

சேலம் கோட்டையைச் சேர்ந்த வெள்ளி வியாபாரி மன்சூர் பாஷா (55). இவர் சேலம் லைன்மேடு பிறைவீதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை வழிமறித்த 2 பேர் கத்தியைக் காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.1.50 லட்சத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பினர்.

இதுதொடர்பான புகாரின்பேரில், அன்னதானப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், மணியனூரைச் சேர்ந்த இஸ்மாயில் (33), தாதகாப்பட்டி பால்ராஜ் (25) ஆகியோர் பணத்தை பறித்தது தெரிந்தது. இதையடுத்து, இருவரையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in