தேர்தலை சுமூகமாக நடத்த ரவுடிகள் விரைவில் கைது

தேர்தலை சுமூகமாக நடத்த ரவுடிகள் விரைவில் கைது
Updated on
1 min read

``தேர்தலை சுமூகமாக நடத்த பிரச்சினைக்குரிய ரவுடிகள் கைது செய்யப்படுவார்கள்” என்று திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தேர்தலை அமைதியாக நடத்த அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. வாகன சோதனை தீவிரப்படுத்தப்படும். முக்கிய இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். தேர்தல் ஆணையம் தெரிவிக்கின்ற தகவலின் அடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

மாவட்டத்தில் இவ்வாண்டு இதுவரை 12 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டுள்ளனர். கடந்த ஆண்டில் 122 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர். எந்தவித கட்சி பாகுபாடுமின்றி உரிய நடவடிக்கை எடுப்பதற்கு காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. தேர்தலை அமைதியாக நடத்துவ தற்கு ஏதுவாக ரவுடிகள் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

இவ்வாண்டு இதுவரை 12 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in