சேலம் பள்ளப்பட்டி அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு அரசுப் போக்குவரத்துக் கழக பணியாளர்கள் கூட்டமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 			                 படம்: எஸ்.குரு பிரசாத்
சேலம் பள்ளப்பட்டி அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு அரசுப் போக்குவரத்துக் கழக பணியாளர்கள் கூட்டமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: எஸ்.குரு பிரசாத்

போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம்

Published on

அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து நேற்று முன் தினம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகத்தில் 60 சதவீத பேருந்துகள் இயக்கப்படவில்லை. சேலம் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

ஈரோட்டில் 2-வது நாளாக நேற்றும் வேலைநிறுத்தம் தொடர்ந்த நிலையில், பேருந்துகள் இயக்கம் வெகுவாகக் குறைந்தது. குறிப்பாக, வெளி மாவட்டத்தில் இருந்து ஈரோட்டுக்கு வரும் பேருந்துகளின் எண்ணிக்கை பாதியாக குறைந்தது. நேற்று முன்தினம் 70 சதவீதம் பேருந்துகள் இயங்கிய நிலையில், நேற்று 50 சதவீதம் பேருந்துகள் மட்டுமே இயங்கியதால், பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

சென்னிமலை சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு போக்குவரத்துத் தொழிற் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில் 60 சதவீதம் பேருந்துகள் மட்டும் இயங்கியதால், போக்குவரத்து சேவையில் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் மற்றும் திருச்செங்கோட்டில் போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in