Published : 25 Feb 2021 03:17 AM
Last Updated : 25 Feb 2021 03:17 AM

எல்ஐசியில் ‘பீமா ஜோதி’ பாலிசி அறிமுகம்

வேலூர்

வேலூரில் எல்ஐசி ‘பீமா ஜோதி’ பாலிசி அறிமுகம் செய்யப்பட்டது.

இதுகுறித்து வேலூர் கோட்ட எல்ஐசி அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘‘எல்ஐசியில் ‘பீமா ஜோதி’ என்ற புதிய பாலிசி அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. வேலூர் கோட்ட எல்ஐசி அலுவலகத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு, முதுநிலை கோட்ட மேலாளர் சரவண ரமேஷ் தலைமை தாங்கி புதிய பாலிசியை அறிமுகம் செய்து வைத்தார். கோட்ட வணிக மேலாளர் வெங்கடகிருஷ்ணன், சிட்டி யூனியன் வங்கி மேலாளர் ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடிவில், கோட்ட விற்பனை மேலாளர் ராஜன் நன்றி தெரிவித்தார்’’ என தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x