Published : 24 Feb 2021 03:17 AM
Last Updated : 24 Feb 2021 03:17 AM
கோவை: கோவை-பொள்ளாச்சி சாலை சுந்தராபுரத்தில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் மேலாளராக கதிர்வேல் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன் இரவு வழக்கம்போல வேலை நேரம் முடிந்தவுடன், நிதி நிறுவனத்தை ஊழியர்கள் பூட்டிச் சென்றனர். இரு நாட்கள் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது, நிறுவன கதவு பூட்டுகள் உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த பொருட்கள் கலைந்து கிடந்தது தெரியவந்தது. நிறுவனத்தில் நுழைந்த மர்ம நபர்கள் பணத்தைக் கொள்ளையடிக்க முயன்றதும், பொதுமக்கள் சப்தம் கேட்டாதாலோ அல்லது லாக்கரை உடைக்க முடியாததாலோ தப்பிச் சென்றிருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக நிறுவன மண்டல மேலாளர் அழகிரி அளித்த புகாாரின் பேரில், போத்தனூர் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT