Published : 24 Feb 2021 03:17 AM
Last Updated : 24 Feb 2021 03:17 AM

மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் கைது

கோவை: சத்துணவு ஊழியர்கள் சங்கம், கோவை மாவட்டப் பிரிவின் சார்பில், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் சாரதாமணி தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் கூறும்போது, ‘‘சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் உள்ளிட்டோரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலமுறை ஊதியம் வழங்கக்கோரி பல ஆண்டுகளாக சத்துணவுப் பணியாளர்கள் போராடி வருகின்றனர். எனவே அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி அரசு அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவதுடன், குடும்ப ஓய்வூதியத்தையும் உயர்த்தி வழங்க வேண்டும். அரசின் பிற துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தையும் வழங்க வேண்டும்’’ என்றனர். தடையை மீறி , ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 135 பேரை ரேஸ்கோர்ஸ் போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x