Published : 24 Feb 2021 03:17 AM
Last Updated : 24 Feb 2021 03:17 AM

ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில்மயான பூஜைக்கு ஏற்பாடுகள் தீவிரம்

பொள்ளாச்சி: ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான மயான பூஜை இன்று (டிச. 24) நள்ளிரவு 1 மணிக்கு நடக்கிறது. தொடர்ந்து இம்மாதம் 26-ம் தேதி இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சியும், 27-ம் தேதி காலை, 7:30 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதற்காக கடந்த சில நாட்களாக மயான பூஜை நடைபெறும் வளாகத்தில் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் போலீஸார், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

ஆழியாறு ஆற்றுப்படுகையில், மயான பூஜை நடக்கும் இடத்தில், மரத்தடுப்புகள் அமைக்கும் பணிகளும், பூஜை நடக்குமிடத்துக்கு செல்லும் பாதையில் புதர், குப்பை அகற்றி சுத்தம் செய்து பணிகளும் நடைபெற்றன. பாதுகாப்புப் பணியில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x