Published : 24 Feb 2021 03:17 AM
Last Updated : 24 Feb 2021 03:17 AM

கேளம்பாக்கம், திருப்போரூர் பகுதிகளில் சாலை மின்விளக்குகளை அமைக்க கோரிக்கை

கேளம்பாக்கம் - வண்டலுார் சாலைகளுக்கிடையே. புதுப்பாக்கம், மாம்பாக்கம், மேலக்கோட்டையூர், ரத்தினமங்கம், கண்டிகை, நெடுங்குன்றம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.

17 கி.மீ. நீளம் கொண்ட இந்த நான்கு வழிச்சாலை பகுதிகளில் கல்லுாரிகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் உள்ளன. ஆனால் இச்சாலையில் தெரு விளக்குகள் இல்லாததால் இரவில் விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.இப்பகுதியில் இரவு நேரத்தில் சமூக விரோத செயல்களும் நடக்கின்றன. அதேபோல் செங்கல்பட்டு - திருப் போரூர் இடையே உள்ள 29 கி.மீ. நீள நெடுஞ்சாலையில் சுமார் 14 கி.மீ. நீள சாலை வனப்பகுதியின் நடுவே அமைந்துள்ளது. இச்சாலையிலும் சாலையோர மின் விளக்குகள் இல்லை. எனவே, மேற்கண்ட சாலைகளில் சாலையோர மின்விளக்குகளை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து, நெடுஞ் சாலைத் துறையினர் ``உள்ளாட்சி அமைப்புகள்தான் மின்விளக்குகளை அமைக்க வேண்டும். மேலும், மின் விளக்கு அமைக்க போதிய நிதி இல்லை. எனினும், ஊராட்சி நிர்வாகத்துக்கு உட்பட்டபகுதிகளில் மின் விளக்குகளை அமைத்து வருகிறோம்'' என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x