

திருநெல்வேலி மற்றும் தென்காசி, தூத்துக்குடியில் மறியலில் ஈடுபட்ட 1,141 சத்துணவு ஊழியர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.
`காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு ஊழியருக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்’ என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கருப்பு உடை அணிந்து மறியல் போராட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற மறியலுக்கு செபத்தி யாள், ஜெலட்மேரி ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் சி. பிச்சையா பேசினார். அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் என்.குமாரவேல், பொருளாளர் கற்பகம் ஆகியோர் பேசினர். போராட்டத்தில் ஈடுபட்ட 205 பேர் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி
தூத்துக்குடி