Published : 24 Feb 2021 03:19 AM
Last Updated : 24 Feb 2021 03:19 AM

துணை வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் 5 துணை வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள உத்தரவில், அணைக்கட்டு மண்டல துணை வட்டாட்சியர் மெர்லின் ஜோதிகா, மாவட்ட வழங்கல் அலுவலக தலைமை உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட வழங்கல் அலுவலக கண்காணிப்பாளர் நதியா, மாவட்ட ஆட்சியர் அலுவலக ஜி-பிரிவு தலைமை உதவியாளராகவும், அங்கு ஏற்கெனவே பணியாற்றி வந்த துளசிராமன், மாவட்ட ஆட்சியர் அலுவலக பி-பிரிவு தலைமை உதவியாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர். காட்பாடி வட்டாட்சியர் அலுவலக தலைமையிடத்து துணை வட்டாட்சியர் மகேஸ்வரி, குடியாத்தம் மண்டல துணை வட்டாட்சியராக மாற்றுப் பணியில் நியமிக்கப்பட்டுள்ளார். காட்பாடி வட்டம் தேர்தல் துணை வட்டாட்சியர்ஜெயந்தி, அதே வட்டத்தில் தலைமையிடத்து துணை வட்டாட்சியராக இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x